உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஓம் நமசிவாய கோஷத்துடன் புரட்டாசி பிரதோஷ வழிபாடு; சிவாலயங்களில் பக்தர்கள் பரவசம் 

ஓம் நமசிவாய கோஷத்துடன் புரட்டாசி பிரதோஷ வழிபாடு; சிவாலயங்களில் பக்தர்கள் பரவசம் 

திருப்பூர்; திருப்பூர் பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். புரட்டாசி மாதம் வளர்பிறை பிரதோஷம் முன்னிட்டு நேற்று திருப்பூர் விசாலாட்சி உடனமர் விஸ்வேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடு நடந்தது. நந்தியம்பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிேஷகம் நடத்தப்பட்டது. தொடர்ந்து நந்தியம்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. அதைத் தொடர்ந்து மூலவருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில், உற்சவர் உமா மகேஸ்வராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பக்திப் பாடல்களை இசைத்த வண்ணம் திரளான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு வழிபட்டனர். தொடர்ந்து திருப்பூர் பிரதோஷ வழிபாட்டு குழு சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது.  எஸ்.பெரியபாளையம் சுக்ரீஸ்வரர் கோவில், நல்லுார் விஸ்வேஸ்வரர் கோவில், லட்சுமி நகர் அண்ணாமலையார் கோவில், டி.பி.ஏ., காலனி காசி விஸ்வநாதர் கோவில், திருநீலகண்டபுரம் திருநீலகண்டேஸ்வரர் கோவில், பூச்சக்காடு செல்வ விநாயகர் கோவில் - விஸ்வநாதர் சன்னதி உட்பட திருப்பூர் பகுதி சிவாலயங்களில் நேற்று பிரதோஷ பூஜை நடந்தது.  அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவில், பழங்கரை பொன் சோழீஸ்வரர் கோவில், பெருமாநல்லுார் உத்தமலிங்கேஸ்வரர் கோவில், அபிேஷகபுரம் ஐராவதீஸ்வரர் கோவில், வெள்ளகோவில் மயில்ரங்கம் தையல்நாயகி உடனமர் வைத்தியநாதஸ்வரர் கோவில், சேவூர் வாலீஸ்வர சுவாமி கோவில், கருவலுார் கங்காதீஸ்வர சுவாமி கோவில், நடுவச்சேரி கோதைப்பிராட்டீஸ்வரர் கோவில் உள்ளிட்ட சுற்றுப்பகுதி சிவாலயங்களில் நேற்று பிரதோஷம் முன்னிட்டு நடந்த சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளில் திரளானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை