மேலும் செய்திகள்
ஆழியாறு அணையில் பேரிடர் மீட்பு பயிற்சி
18-Jun-2025
திருப்பூர், : கமாண்டோ பயிற்சி பள்ளி மற்றும் திருப்பூர் மாவட்ட போலீஸ் சார்பில், வடகிழக்கு பருவமழை காலங்களில் பாதிப்பு ஏற்படும் பகுதியில் உள்ள மக்களை காக்கும் பொருட்டு, அதற்கு தேவையான பயிற்சி மாவட்ட போலீசாருக்கு அளிக்கப்படுகிறது.இப்பயிற்சியில், திருப்பூர் மாவட்ட போலீசில் உள்ள சட்டம்-ஒழுங்கு, ஆயுதப்படை போலீசார் உட்பட ஏராளமான போலீசார் பங்கேற்றனர். வெள்ளத்தில் மீட்பு, முதலுதவி, மரம் அறுக்கும் இயந்திரத்தை இயக்கும் பயிற்சி, டவர் லைட் இயக்கும் பயிற்சி ஆகியவை குறித்து தெரியப்படுத்தப்படுகிறது.அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் - மங்கலம் ரோடு, ஆண்டிபாளையத்தில் உள்ள படகு குழாமில், நேற்று முன்தினம் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதில், தண்ணீரில் தத்தளிக்கும் மக்களை காப்பாற்றுவது உள்ளிட்டவை செயல்முறையில் விளக்கப்பட்டது.
18-Jun-2025