உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

உடுமலை: உடுமலை பார்க் ரோடு நகராட்சி நடுநிலைப்பள்ளியில், திருமூர்த்திநகர் மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கான பாராட்டு விழா நடந்தது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முன்னாள் மாணவர் சங்கத்தலைவர் பூபதி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் வரவேற்றார்.வட்டார கல்வி அலுவலர் சின்னப்பராஜ் முன்னிலை வகித்தார். பணிநிறைவு பெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. ஆசிரியர் துரைசாமி நன்றி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி