முத்துாரில் மணம் பரப்பும் யூகலிப்டஸ் மரக்கன்றுகள்
திருப்பூர்; முத்துார் அடுத்த வேலம்பாளையத்தில், 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், 3,700 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள் நடப்பட்டன. 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில், விவசாய நிலங்களில் பயனுள்ள மரக்கன்றுகள் நட்டு வளர்க்கும் பணி மும்முராக நடந்து வருகிறது. நடப்பு ஆண்டில் செயல்படுத்தப்படும் திட்டத்தில், இதுவரை, 1.86 லட்சத்துக்கும் அதிகமாக மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், முத்துார் அடுத்த வேலம்பாளையம் வெட்டுக்காடு தோட்டத்தில், தங்கராஜ் என்பவருக்கு சொந்தமான நிலத்தில், 3,700 'யூகலிப்டஸ்' மரக்கன்றுகள் நடப்பட்டது, ஒரே இடத்தில், அதிக எண்ணிக்கையிலான 'யூகலிப்டஸ்' மரங்கள் வளரும் போது, அப்பகுதியில் மணம் பரப்பும் என, விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். 'வனத்துக்குள் திருப்பூர் -11' திட்டத்தில் மரக்கன்றுகள் நட்டு வளர்க்க விரும்புவோர், 90470 86666 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, தெரிவித்துள்ளனர்.