மேலும் செய்திகள்
போக்குவரத்து நெரிசல்
28-Aug-2025
உடுமலை; உடுமலை உழவர்சந்தை ரோட்டில் உள்ள தற்காலிக ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகே உழவர்சந்தை செயல்படுகிறது. இங்கு தினமும் ஆயிரக்கணக்கான விவசாயிகளும், பொதுமக்களும் வருகின்றனர். இந்த ரோட்டில் காலை நேரங்களில் தற்காலிக கடைகள் போடப்படுகின்றன. இதனால் வாகனங்கள் செல்வதற்கு இடையூறு ஏற்படுகிறது. மக்களும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, உழவர்சந்தை ரோட்டிலும் போடப்படும் தற்காலிக ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
28-Aug-2025