மூச்சுத்திணறி குழந்தை இறப்பு தந்தை போலீசில் புகார்
பொங்கலுார் : மூச்சுத்திணறி குழந்தை இறந்தது குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்தவர் கொத்தாள முத்துப்பாண்டியன். பொங்கலுாரில் உள்ள ஒரு பண் ணையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு லோகேஸ்வரன் என்ற இரண்டு வயது குழந்தை உள்ளது.இவர் தோட்ட வேலைக்கு சென்றபோது, அவரது மனைவி, மூச்சுத்திணறி குழந்தை இறந்துவிட்டது என்று கூறியுள்ளார்.இதுகுறித்து அவர் அவிநாசிபாளையம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.