உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை
திருப்பூர் : உருத்திர பசுபதி நாயனார் குருபூஜை, புரட்டாசி மாதம் அஸ்வினி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், அர்த்தசாம பூஜை அடியார்கள் திருக்கூட்டத்தினர் சார்பில், நேற்று குருபூஜை நடந்தது.உருத்திர பசுபதி நாயனார் திருமேனிக்கு, அபிேஷகம் மற்றும் அலங்கார பூஜைகள் நடந்தது.சிவாச்சாரியார்களும், சிவனடியார்களும், திருமுறை பதிகங்களையும், திருத்தொண்டத்தொகை பாராயணம் செய்தும் வழிபட்டனர்.