உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு தேவை

 புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கு தேவை

உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை பஸ் ஸ்டாண்ட் அருகே புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்களும், கிழக்கு பகுதிக்கு கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்களும் இயக்கப்படுகின்றன. இங்கு உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், அங்கு பயணியர் பஸ் ஏற அச்சமடைகின்றனர். இதுகுறித்து உயர்மின்விளக்கு அமைக்க பல முறை புகார் தெரிவித்துள்ளனர். எனவே, புது பஸ் ஸ்டாண்டில் உயர்மின் விளக்கை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !