மேலும் செய்திகள்
உயர் மின்விளக்கு அமைக்கணும்
13-Oct-2025
உடுமலை: உடுமலை புது பஸ் ஸ்டாண்டில், போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. அங்கு உயர்மின் விளக்கு அமைக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே புது பஸ் ஸ்டாண்ட் செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இங்கு பழநி நோக்கி செல்லும், புறநகர் பஸ்கள், கிழக்கு பகுதிக்கு செல்லும் டவுன்பஸ்கள் இயக்கப்படுகின்றன. இங்கு பயணியருக்கு தேவையான இருக்கை, நிழற்கூரை இல்லாமல் உள்ளது. மேலும் உயர்மின் விளக்கு இல்லாததால், இரவு நேரங்களில் போதிய வெளிச்சம் இல்லாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பயணியர் சிரமப்படுகின்றனர். எனவே, இதை நகராட்சி அதிகாரிகள் அமைக்க வேண்டும் என பொதுமக்கள், பயணியர் எதிர்பார்க்கின்றனர்.
13-Oct-2025