உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மின்னணு முறை  நடைச்சீட்டு அமல்

மின்னணு முறை  நடைச்சீட்டு அமல்

கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:தமிழ்நாடு இருப்பு கிடங்கு விதிகள்படி, குவாரிகளிலிருந்து எம்.சாண்ட், ஜல்லி ஆகியவற்றை, போக்குவரத்து நடைச்சீட்டு பெற்று, எடுத்துச் செல்ல வேண்டும். இதற்கான ஹாலோகிராம் ஒட்டப்பட்ட நடைச்சீட்டுகள் பயன்பாடு நிறுத்தப்படுகிறது. எம்.சாண்ட், ஜல்லி முதலான கட்டுமான பொருட்களை எடுத்துச் செல்ல, வரும் 9ம் தேதி முதல் (இன்று) மின்னணு சீட்டு வழங்கப்படும். www.mimas.tn.gov.inஎன்ற இணையதளம் வாயிலாக, மின்னணு முறையில் வழங்கப்படும் நடைச்சீட்டு மட்டுமே செல்லுபடியாகும். மின்னணு நடைச்சீட்டு இல்லாமல், கட்டுமான பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ