உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்

வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பு தீவிரப்படுத்துவது அவசியம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருப்பூர்; திருப்பூர் அருகே 24 ஆண்டாக முறைகேடாக தங்கியிருந்த வங்கதேச நபரை போலீசார் கைது செய்த சம்பவம், வங்கதேசத்தினர் மீதான கண்காணிப்பை மேலும் தீவிரப்படுத்த வேண்டும் என்பதை உணர்த்துகிறது.திருப்பூர் பின்னலாடை மற்றும் சார் நிறுவனங்களில், உ.பி., பீஹார், ஒடிசா, மேற்குவங்கம் உள்ளிட்ட வெளிமாநிலத்தினர் தொழிலாளர்களாக பணிபுரிகின்றனர். போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களைக் காட்டி, வங்கதேசத்தினர் பலரும் தொழிலாளர்களாக பணியில் சேர்கின்றனர்.கோவை தீவிரவாத தடுப்பு பிரிவினர் மற்றும் தனிப்படை போலீசார் கண்காணிப்பைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி துவங்கி முதல் ஏப்ரல் மாதம் வரை என, நான்கு மாதங்களில் முறைகேடாக தங்கியிருந்த, 130 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிர்ச்சி தந்த கைது

திருப்பூர் அருகே கரைப்புதுாரில் வீட்டு கடன் தவணை செலுத்தாததால், சில நாட்களுக்கு முன் வீட்டை ஜப்தி செய்வதற்காக தனியார் நிறுவனத்தினர் வந்தனர். வீடு கட்டி, வாடகைக்கு விட்டவர், சயன் என்கிற ஷகீன், 40; இவர் வங்கதேசத்தை சேர்ந்தவர் என்பது அப்போதுதான் தெரியவந்தது.கடந்த, 1999ம் ஆண்டு இந்தியாவுக்குள் நுழைந்தவர், சென்னையை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்து, 2001ம் ஆண்டு திருப்பூருக்கு வந்தார். பத்து ஆண்டுகள் முன் கரைப்புதுாரில் வீடு கட்டி வாடகைக்கு விட்டு வசித்து வந்தது தெரிந்தது.கடந்த, நான்கு மாதங்களாக மாநகரம், புறநகரில் போலீசார் தீவிரமான சோதனை, கண்காணிப்பு எல்லாம் இருந்தும், இந்த நபர் போலீசில் சிக்கவில்லை.

கண்காணிப்பில் ஓட்டை

வங்கதேசத்தினர் பலர் கைது செய்யப்படுவது பெரும்பாலான நேரங்களில், குற்றச்சம்பவங்களிலோ, வேறு ஏதேனும் பிரச்னைகளிலோ அவர்கள் பிடிபடும்போதுதான். இன்னும் எத்தனை வங்கதேசத்தினர் இங்கு ஊடுருவியிருப்பரோ என்ற சந்தேகத்தை ஊர்ஜிதப்படுத்துகிறது, சயன் என்கிற ஷகீன் கைது சம்பவம். இதற்கென கூடுதல் போலீசாரை நியமித்து தேடுதல் வேட்டை நடத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மாவட்டத்தில் உள்ள வெளிமாநிலத் தொழிலாளர்கள் பதிவு செய்யப்படும் நடைமுறை, கொரோனா காலத்தில் துவங்கியது. ஆனால், அப்படியே அது முடங்கிப்போனது.போலீஸ் - வருவாய் - தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட அரசுத்துறைகள் இடையேயான ஒத்துழைப்பு மற்றும் தொழில் நிறுவனங்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் இது சாத்தியமாகும். இதை முறையாக மேற்கொண்டால், போலி ஆதார் உள்ளிட்ட ஆவணங்களுடன் தங்கியுள்ள வங்கதேசத்தினர் எளிதாகப் பிடிபடுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

c.mohanraj raj
மே 05, 2025 15:57

இவர்களுக்கு மினி ஆட்டோ ஹெல்மெட் பிடிப்பதற்கு நேரம் சரியாக இருக்கிறது பிறகு எங்கே வங்கதேச ஆட்களை பிடிக்கிறார்கள்


venugopal s
மே 05, 2025 11:52

நாட்டின் எல்லையை சரிவர கண்காணிக்க துப்பில்லாத மத்திய பாஜக அரசை குறை கூறுவதை விட்டு விட்டு எல்லைப் பாதுகாப்புக்கு சம்பந்தம் இல்லாத மாநில அரசுகளை குறை கூறுவது சங்கிகளின் அறிவுத்திறனை பறைசாற்றுகிறது!


Natchimuthu Chithiraisamy
மே 05, 2025 10:45

போலி ஆதார் கார்டு விளக்கம் போட்டோவுடன் பிரின்டிங் கார்டு செய்து வைத்திருப்பதா இல்லை இந்தியாவில் ஆதார் கார்டு அரசு மூலம் வங்க தேசத்தினார் வாங்கி வைத்திருப்பது. என்பதை தெளிவாக சொல்லவும். அவர்கள் எண்ணிக்கை 100 அல்லது ஆயிரம் இல்லை பல ஆயிரங்கள் இருக்கலாம் என்று வாசகர்கள் கருத்து சொல்லி இருக்கிறார்கள்.


rama adhavan
மே 05, 2025 10:13

ஆனாலும் அடக்கி வாசிக்க தான் காது வழி மேலிட ஆணை வரும். அப்போதுதான் ஓட்டு போகாது. புரிகிறதா?


தமிழ்வேள்
மே 05, 2025 09:04

திருட்டு திராவிடம் அர்த்தம் அற்ற அடுக்கு மொழி தமிழ் ஆகிய இரண்டால் எதற்கும் லாயக்கு இல்லாமல் குடி தேசத்துரோகம் கள்ள உறவு கள்ள கடத்தலுக்கு அடிமையாகிவிட்ட தமிழன் இனி ஒருக்காலும் திருந்த மாட்டான்.. தமிழகம் மூன்று மாநிலங்களாகவும் சென்னை தனி யூனியன் பிரதேசம் ஆகவும் பிரிக்கப்பட்டால் மட்டுமே இங்கு தேசவிரோத சிந்தனை செயல் குறைந்து அமைதி திரும்பும்.. எதிர்காலத்தில் வெள்ளை வேஷ்டி கட்டி தோளில் துண்டு போட்டவர்கள் பாரதத்தின் மற்ற பகுதிகளில் தாக்குதலுக்கு உள்ளானாலும் வியப்பு ஏதும் இல்லை. தமிழனின் தேசவிரோத சிந்தனை எல்லையில்லாத அளவில் இருக்கிறது இன்று. எல்லாம் ராமசாமி நாயக்கர் அண்ணாதுரை கருணாநிதி வகையறா உபயம்


Savitha
மே 05, 2025 09:02

இந்த நாட்டில் மட்டும் தான் வெளிதேசத்தில் இருந்து இங்கு ஊடுருவி வந்து வாழும் வங்கதேச, பாகிஸ்தானிய, ஆப்கானிஸ்தான் மக்களை கண்காணிக்கப்பட உத்தரவு என்று அசால்டாக விடுகிறார்கள், அமெரிக்காவில் ஊடுருவிய எல்லா வெளிநாட்டு மக்களையும், கை காலை கட்டி, விமானத்தில் அவரவர் நாட்டுக்கு அனுப்புகிறார்கள், இங்கு எல்லாம் கள்ள ஓட்டு படுத்தும் பாடு.


சந்திரன்
மே 05, 2025 08:38

இவன் 1999ல் இருந்து டீம்காவுக்கு ஓட்டு போட்டு இருப்பான். இதுபோல லட்சக்கணக்கில் போலிகள் இந்தியா முழுவதும் இருக்காங்க. அதற்குத்தான் சில கைகூலிங்க CAAவை எதிர்தாங்க


Svs Yaadum oore
மே 05, 2025 07:27

அசாம் வழியாக நம் நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழையும் வங்கதேசத்தினர் தமிழகம் மற்றும் பிற தென் மாநிலங்களுக்கு சென்று ஜவுளித் துறையில் பணிபுரிகின்றனர். சமீபத்தில் இவ்வாறு சேர்ந்தவர்களின் விவரங்களை ஆய்வு செய்யும்படி தமிழக முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன், என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கூறியுள்ளார். இந்த பங்களாதேஷிகளுக்கு ஆதார் கார்டு ரேஷன் கார்டு ஏற்பாடு செய்ய தமிழகத்தில் ஏஜென்ட்கள் செயல்பட்டு வருவதும் தெரியவந்ததாம்...


Svs Yaadum oore
மே 05, 2025 07:16

இந்த பங்களாதேஷிகள் ஊடுருவுவது மேற்கு வங்க எல்லையில் ...... எல்லை வேலிகள் கட்டுவதற்கு தேவையான நிலத்தை மேற்கு வங்க மேடம் மாநில அரசு ஒதுக்கினால், எல்லைக்கான முழுப் பொறுப்பையும் மத்திய அரசு ஏற்கத் தயாராக இருப்பதாக அறிவிப்பு ..அங்கு வங்கதேச எல்லையில் உள்ள 72 பகுதிகளுக்கு வேலி அமைக்கும் பணியை முடிக்க எல்லை பாதுகாப்பு படை க்கு நிலம் தேவைப்படுவது குறித்து மேற்கு வங்க மேடத்திற்கு தெரிவிக்கப் பட்டது. ஆனால் சிறுபான்மையினரை திருப்திப்படுத்துவதற்காக இது நடக்க அவர் அனுமதிக்கவில்லை. எல்லையை மூடுவதற்கு நிலம் கோரி உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது.


Svs Yaadum oore
மே 05, 2025 07:13

குடியுரிமை பெற 15 லட்சம் செலவு செய்தும் முடியவில்லை என்று இந்த ஆசாமி போலீசில் வாக்குமூலம். பங்களாதேஷிக்கு குடியுரிமை கொடுக்கும் உரிமையை ஒன்றிய அரசு பறித்து கொண்டதால் விடியல் அரசு சமூக நீதியை காப்பாற்ற இயலாமல் போனது.. இந்த கொடுமையை எதிர்த்து விடியல் அரசு ஒன்றிய அரசுக்கு எதிராக உரிமை போராட்டம் நடத்தும்.. பங்களாதேஷிக்கு விடியலே குடியுரிமை கொடுத்து சமூக நீதியை காப்பாற்றும்.. குடியுரிமை கொடுப்பது என்பது ஒன்றிய அரசின் அப்பன் வீட்டு சொத்தா? இந்த கொடுமையை எதிர்த்து விடியல் கனி அக்கா கவர்னரை கண்டித்து மவுண்ட் ரோட்டில் மெழுகுவத்தி ஊர்வலம் நடத்துவார் ...


முக்கிய வீடியோ