உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / காங்கயம் மாடுகள் விற்பனை

காங்கயம் மாடுகள் விற்பனை

நத்தக்காடையூர், மாட்டுத்தாவணியில் காங்கயம் இன மாடுகளுக்கான சந்தை வாரம்தோறும், ஞாயிற்றுக்கிழமை நடக்கிறது. நேற்றைய சந்தையில், மாடு, காளை, கிடாரி மற்றும் காளை கன்றுகள் என 42 கால்நடைகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. இதில், மாடுகள் 20 ஆயிரம் ரூபாய் முதல் 95 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகின. கிடாரி கன்று 12 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை விற்றது. மொத்தம் 21 கால்நடைகள் 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ