உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குமுதா பள்ளி மாணவர் வில்வித்தையில் முதலிடம்

குமுதா பள்ளி மாணவர் வில்வித்தையில் முதலிடம்

திருப்பர்: இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்தும் தேசிய அளவில் வில்வித்தையில் விளையாடுவதற்கான தேர்வு போட்டி சமீபத்தில் சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்ற நம்பியூரில் உள்ள குமுதா பள்ளி பிளஸ் 1 மாணவன் செல்வரித்தீஷ், 17 வயது தனி நபர் பிரிவில் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர் குழு போட்டி, கலப்பு பிரிவு என, மூன்று பிரிவுகளில் தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். நவ., மாதம் ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் நடக்கும் தேசிய போட்டியில் தமிழகம் சார்பில் பங்கேற்க உள்ளார். தேசிய போட்டிக்கு தேர்வான மாணவனை பள்ளி தாளாளர் பாராட்டி பரிசு வழங்கினார். துணை தாளாளர் சுகந்தி, செயலர் அரவிந்தன், இணை செயலர் மாலினி, விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா உள்ளிட்டோர் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை