குரும்பபாளையம் கோவில் யுகாதி தீர்த்தக்குட விழா
அவிநாசி; அவிநாசி அடுத்த அ.குரும்பபாளையம் தாசபள்ளத் தோட்டத்தில் உள்ள ஸ்ரீ கரிவரதராஜ பெருமாள்,ஸ்ரீ ஆதிபராசக்தி அம்பாள் கோவிலில் யுகாதி தீர்த்தக்குட விழாவை முன்னிட்டு நேற்று காலை கவ்வாள பூஜை, அபிஷேக பூஜை, மகாதீபாராதனை நடைபெற்றது.பூசாரி அருள்வாக்கு வழங்கினார். ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டி குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.