ஜிம்மில் கீழே விழுந்து வக்கீல் பலி உடல் ஆராய்ச்சிக்கு ஒப்படைப்பு
திருப்பூர்:திருப்பூரில், 'ஜிம்'மில் கீழே விழுந்து இறந்த வக்கீலின் உடல் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில், மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது.திருப்பூர், எம்.ஜி.புதுாரை சேர்ந்தவர் ரவி, 58, வக்கீல். இவரின் நண்பர், திருப்பூர், குமரன் ரோட்டில் ஜிம் வைத்து நடத்தி வருகிறார். நேற்று காலை, நண்பரை பார்க்க அங்கு சென்றார். ஜிம்மின் மேற்கூரை சிமென்ட் சீட் போடப்பட்டு இருந்தது.அறையின் வெப்ப காற்றை வெளியேற்ற, அங்கு சிறிய மின்விசிறி உள்ளது. அதில் பழுது ஏற்பட்டதால், சரி செய்ய ரவி மேலே ஏறினார். எதிர்பாராத விதமாக மேற்கூரை உடைந்து கீழே விழுந்து மயக்கமடைந்தார்.அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதனையில் இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.அவரின் உடல், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை மாணவர்களின் ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக இறந்த அவரின் உடலுக்கு வக்கீல்கள் அஞ்சலி செலுத்தினர்.