போலி ஆவணம் தயாரித்தவர் கைது
திருப்பூர்; திருப்பூரில் உரிய ஆவணங்கள் இல்லாமல் முறைகேடாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் சிலரை கடந்த, இரு மாதம் முன்பு அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.இவ்வழக்கில் போலிஆதார் கார்டு தயாரித்து, இ-சேவை மையம் மூலம் பெற்று கொடுத்த சம்பவத்தில் பல்லடம் அருள்புரத்தை சேர்ந்த மாரிமுத்துவை போலீசார் கைது செய்தனர்.ஆதார் தயாரிக்கப்பட்டது தெற்கு போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட பகுதி என்பதால், அந்த ஸ்டேஷனிலும் மாரிமுத்து மீது வழக்குப்பதிவு செய்து இருந்தனர். தற்போது ஜாமீனில் வந்த அவரை தெற்கு போலீசார் கைது செய்தனர்.