உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை

ஆன்லைன் ரம்மி விளையாடி பணம் இழந்தவர் தற்கொலை

திருப்பூர்; 'ஆன்லைனில்' ரம்மி விளையாடி, 50 ஆயிரம் ரூபாய் இழந்த பனியன் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார். திண்டுக்கல் மாவட்டம், ஆத்துார், சேடப்பட்டியை சேர்ந்தவர் ரவிக்குமார், 24. இவர் கடந்த, 20 நாட்களாக திருப்பூர், குமாரசாமி லே அவுட்டில் இயங்கும் பனியன் நிறுவனம் ஒன்றில் தங்கி வேலை செய்து வந்தார். அவர், தனது மொபைல் போனில், அடிக்கடி 'ஆன்லைனில்' ரம்மி விளையாடி வந்தார். சமீபத்தில் விளையாடியதில், 50 ஆயிரம் ரூபாய் இழந்தார். இதனால், மனமுடைந்து காணப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் இரவு பணியாற்றிய நிறுவனத்தின் மாடியில் உள்ள அறையில், துாக்குமாட்டி இறந்தார். இது குறித்து, திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ