எம்.எல்.ஏ., செல்வராஜ் மகனுக்கு தி.மு.க., மாணவரணியில் பொறுப்பு
திருப்பூர் : திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்குட்பட்ட வடக்கு மாநகர தி.மு.க., மாணவரணி அமைப்பாளராக திலக்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். துணை அமைப்பாளர்களாக குணா, சூர்ய பிரகாஷ், பிரேம்நாத், கவுதம், சிவகுமார், கிளாடிஸ் லுார்து, ஜோஸ்பின் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களைக் கட்சியின் மாணவரணி மாநில செயலாளர் எழிலரசன் எம்.எல்.ஏ., நியமித்துள்ளார். திலக்ராஜ், திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜின் மகன் ஆவார்.