உள்ளூர் செய்திகள்

நிழற்கூரை தேவை

உடுமலை; உடுமலை - ஆனைமலை ரோட்டில், மாவட்ட எல்லையில், அமைந்துள்ள தேவனுார்புதுார் கிராமத்துக்கு, பொள்ளாச்சி, உடுமலையில் இருந்து, 20க்கும் அதிகமான பஸ்கள் இயக்கப்படுகின்றன.சுற்றுப்பகுதியில் இருந்து, இச்சந்திப்பு பகுதிக்கு, நாள்தோறும் நுாற்றுக்கணக்கான மக்கள் வருகின்றனர்; அங்கிருந்து, கிராமங்களுக்கு செல்லும் பஸ்சுக்காக காத்திருக்கின்றனர். ஆனால், அப்பகுதியில் நிழற்கூரை வசதியில்லை.இதனால், பயணியர், பஸ்சுக்காக வெயிலிலும், அருகிலுள்ள கடைகளின் முன்புறமும் காத்திருக்க வேண்டியுள்ளது. காலை, மாலை நேரங்களில், மாணவர்கள், அதிகமாக பாதிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை