8ம் வகுப்பு மாணவருக்கு என்.எம்.எம்.எஸ்., தேர்வு
உடுமலை; மத்திய அரசின் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகைத் திட்டத்தின் (என்.எம்.எம்.எஸ்.,) கீழ் அரசு, அரசு உதவி பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.ஒன்பது முதல் பிளஸ் 2 வரை மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் இத்திட்டத்துக்கு, ஆண்டுதோறும் தேர்வு நடத்தப்படுகிறது.நடப்பு 2025ம் ஆண்டுக்கான தேர்வு, வரும், பிப்., 22ம் தேதி நடக்கிறது. கூடுதல் தகவல்களை, www.dge.tn.gov.inஎன்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.