உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள், பயணியர் தவிப்பு

பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு; பொதுமக்கள், பயணியர் தவிப்பு

உடுமலை ; உடுமலை பஸ் ஸ்டாண்டிற்கு, தினமும் நுாற்றுக்கும் மேற்பட்ட வெளியூர், டவுன் பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும், ஆயிரக்கணக்கான பயணியர் பல்வேறு நகரங்களுக்கு செல்ல வருகின்றனர்.இதனால், பஸ் ஸ்டாண்டில் எப்போதும் பரபரப்பாக காணப்படும். ஆனால், இந்த பஸ் ஸ்டாண்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லை. நகராட்சி இலவச கழிப்பிடம் பராமரிப்பின்றி, சுகாதாரமின்றி காணப்படுகிறது. அங்கு செல்லும் பயணியர், மூக்கை பிடித்துக்கொண்டு செல்ல வேண்டியதுள்ளது. இதை சுத்தப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேலும், திருப்பூர் பஸ்கள் நிற்குமிடத்தில் பயணியர் காத்திருப்பதற்கான இடம் உள்ளது. இங்கு சிறிய தற்காலிக கடைகள் போடப்படுகின்றன.அங்குள்ள கடைகளும் ஆக்கிரமிக்கின்றன. இதனால், பயணியர் அந்த இடத்தில் அமர முடியாமல் நின்று கொண்டு அவதிப்பட வேண்டியதுள்ளது. பெண்களும், குழந்தைகளும், முதியவர்களும் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, பயணியருக்கு இடையூறாக போடப்படும் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை