மேலும் செய்திகள்
11 தாசில்தார்கள் பணியிட மாற்றம்
21-Jun-2025
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், 13 ஊராட்சி ஒன்றியங்களில் பணி புரிந்து வரும், உதவி, இளநிலைபொறியாளர், 14 பேரை பணியிட மாறுதல் செய்து, கலெக்டர் கிறிஸ்துராஜ் உத்தர விட்டுள்ளார்.உடுமலை உதவி பொறியாளர் வரதராஜ பெருமாள், காங்கயத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்; அங்கு பணிபுரியும் கார்த்திக்குமார், திருப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளார். குண்டடம் லோகேஷ்குமார் வெள்ளகோவிலுக்கும்; அங்கிருந்த மகாலட்சுமி பொங்கலுாருக்கும் மாற்றப்பட்டுள்ளனர். பொங்கலுார் ரங்கசாமி, பல்லடத்துக்கும்; அங்கு பணிபுரியும் செந்தில்குமார் குண்டடத்துக்கும் மாற்றப்பட்டுள்ளனர்.குடிமங்கலம் கந்தசாமி, உடுமலைக்கு செல்கிறார்; அங்கிருந்த சுப்பிரமணி குடிமங்கலத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். வெள்ளகோவில் கிருஷ்ணமூர்த்தி, குடிமங்கலத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார்; அங்குள்ள இளநிலை பொறியாளர் காந்திமதி, தாராபுரத்திலுள்ள காலிப்பணியிடத்துக்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். அவிநாசி மனோஜ்குமார், திருப்பூருக்கும்; அங்குள்ள இளநிலை பொறியாளர் மகேஸ்வரி, திருப்பூர் உப கோட்டத்துக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். ஊத்துக்குளி செந்தில்குமார், அவிநாசிக்கும்; மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பணிபுரியும் கணேசன், ஊத்துக்குளிக்கும் மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்.
21-Jun-2025