அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அவசியம்
மடத்துக்குளம்; உடுமலை அருகே அமராவதி ஆற்றுப்பாலத்தில் பிரதிபலிப்பான் அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.திருப்பூர் - திண்டுக்கல் மாவட்ட எல்லையில் மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றுப்பாலம் உள்ளது. இப்பாலம் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்கின்றன.இப்பாலத்தில் போதிய வெளிச்சம் இல்லை. இதனால், அங்கு மின்விளக்குகள், பிரதிபலிப்பான் அமைக்க பேரூராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மடத்துக்குளம் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.