மேலும் செய்திகள்
ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா
23-Nov-2024
அவிநாசி: சேவூர், முறியாண்டம்பாளையம் ரோட்டில் உள்ள ஸ்ரீ பால சாஸ்தா அய்யப்பன் கோவிலில் கடந்த நவ., 20ம் தேதி மஹா கும்பாபிஷேக விழா நடந்தது. கும்பாபிஷேக மண்டல பூஜை நிகழ்ச்சியில் நாள்தோறும் மாலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனை நடைபெற்று வந்தது.கும்பாபிஷேக மண்டல பூஜை நிறைவு நாளான நேற்று கணபதி ஹோமம், ருத்ர மஹன்யாச ஹோமம், ஸ்ரீ சாஸ்தா ஹோமம், விஷ்ணு சகஸ்ரநாம அர்ச்சனை, அஷ்டலட்சுமி ஹோமம் ஆகியவற்றை தொடர்ந்து, அஷ்டாபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து, சிறப்பு அலங்கார தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. ஸ்ரீ தர்ம சாஸ்தா டிரஸ்ட் சார்பில், பக்தர் களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
23-Nov-2024