மாநில அளவிலான தபால் தலை கண்காட்சி
உடுமலை; வருங்கால தலைமுறையினரிடம், தபால் தலை சேகரிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க, தமிழ்நாடு தபால்துறை சார்பில், சென்னையில், 2025 ஜன., 29 முதல் பிப்., 1ம் தேதி வரை, மாநில அளவிலான தபால் தலை கண்காட்சி நடத்தப்படுகிறது.கண்காட்சியில் பல்வேறு தபால் தலை சேகரிப்பாளர்கள், பள்ளி மாணவ, மாணவியரின் தபால் தலை சேகரிப்புகள், காட்சிப்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தின் எந்த பகுதியை சேர்ந்தவர்களும் கண்காட்சியில் பங்கேற்கலாம்.தங்கள் தபால் தலை சேகரிப்புகளை, காட்சிப்படுத்த விரும்புவோர், வரும், 9ம் தேதிக்குள், https://tamilnadupost.cept.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.மாநில தபால் தலை கண்காட்சிக்கான விண்ணப்பங்கள், திருப்பூர் தலைமை தபால் அலுவலகம் உட்பட அனைத்து தபால் தலை நிலையங்களிலும் கிடைக்கின்றன என, தபால் அலுவலர் தெரிவித்துள்ளார்.