மேலும் செய்திகள்
கே.எம்.சி., பப்ளிக் பள்ளியில்மாணவர் பாராளுமன்றம்
06-Jul-2025
திருப்பூர்; திருமுருகன்பூண்டியில் உள்ள ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளியில், மாணவர் தலைவர், மன்ற தலைவர் மற்றும் மன்ற துணைத் தலைவர் பதவியேற்பு விழா நடந்தது.பள்ளி தாளாளர் கார்த்திகேயன், தலைமைவகித்து, துவக்கி வைத்தார். பள்ளி முதல்வர் பிரியாராஜா வரவேற்றார். மாணவர்களின் வரவேற்பு நடனத்துடன், நிகழ்ச்சி துவங்கியது.சிறப்பு விருந்தினராக, இந்திய பட்டய கணக்கறிஞர் கழக திருப்பூர் பிரிவு, துணைத்தலைவர் ஹரிசங்கர் பங்கேற்று, பேசினார். பின், செம்மொழி மன்றம், சுற்றுச்சூழல் மன்றம், பாரம்பரிய மன்றம், அறிவியல் மன்றம், ஆங்கிலம் மற்றும் விளையாட்டு மன்றங்களின் தலைவர், துணைத் தலைவர்கள் பதவியேற்று, உறுதிமொழியேற்றுக் கொண்டனர்.முடிவில், பள்ளி ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, நன்றி கூறினார். நிகழ்ச்சியில் பள்ளி மேலாளர், பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக பங்கேற்றனர்.
06-Jul-2025