மேலும் செய்திகள்
தமிழ் கூடல் விழா போட்டி; மாணவர்களுக்கு சான்றிதழ்
16-Aug-2025
பொங்கலுார்,; கொடுவாய் அரசு மேல்நிலைப் பள்ளியில், தலைமை ஆசிரியை பிரேமா தலைமையில் தமிழ்க் கூடல் விழா நடந்தது. இதில் காமநாயக்கன்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கவிஞர் சந்திரசேகர் பங்கேற்று தமிழின் தொன்மை, இலக்கண, இலக்கிய வளம், தமிழ் வளர்த்த சான்றோர்கள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினார். தமிழ் மொழியின் சிறப்பை உணர்த்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
16-Aug-2025