எஸ்.எஸ்.ஐ.,யை கொன்றவர் போலீசாரால் சுட்டுக்கொலை உடுமலை அருகே அடுத்த நாளே அதிரடி
உடுமலை:உடுமலை அருகே குடும்ப பிரச்னையை விசாரிக்க சென்ற எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலுவை வெட்டிக் கொன்ற மணிகண்டனை, போலீசார் சம்பவ இடத்துக்கு அருகில் 'என்கவுன்டர்' செய்து சுட்டுக் கொன்றனர். இந்த சம்பவத்தின் போது, எஸ்.ஐ., ஒருவர் காயமடைந்தார். அடிதடி திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே சிக்கனுாத்து கி ராமத்தில் உள்ள மடத்துக்குளம் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., மகேந்திரன் தென்னந்தோப்பில், திண்டுக்கல் மாவட்டம், வேடசந்துாரைச் சேர்ந்த மூர்த்தி, 60, அவரது மகன்கள் மணிகண்டன், 30, தங்கபாண்டி, 27, பணியாற்றி வந்தனர். கடந்த 5ம் தேதி இரவு, மது போதையில் மூன்று பேரும் அவர்களுக்குள் அடிதடியில் ஈடுபட்டனர்.குடிமங்கலம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதா ல், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல், ஆயுதப்படை காவலர் அழகுராஜா ரோந்து வாகனத்தில் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, 'எங்கள் குடும்ப பிரச்னைக்குள் போலீஸ் எப்படி வரலாம்?' என ஆவேசமாக கூறிய தந்தை, மகன்கள், இரும்பு ராடால் தாக்கியதோடு, மணிகண்டன் அரிவாளால் வெட்டியதில், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கைது செய்தனர் ஏழு தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகள் தேடப்பட்டனர். வழக்கில் தொடர்புடைய மூன்று பேரையும், நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். நேற்று காலை 6:00 மணியளவில் கைது செய்தவர்களை, குடிமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர். எஸ்.எஸ்.ஐ., கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை, மணிகண்டன் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே மறைத்து வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதனால், குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு அவரை அழைத்து சென்றனர். அப்போது, அரிவாளை எடுத்த மணிகண்டன், எஸ்.ஐ., சரவணகுமாரை வெட்டி விட்டு தப்ப முயற்சித்துள்ளார். போலீசார் தங்களை தற்காத்துக்கொள்ள, மணிகண்டனை துப்பாக்கியால் சுட்டபோது, தலையில் குண்டு பட்டு, சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்தார். இச்சம்பவத்தில், கையில் காயமடைந்த எஸ்.ஐ., சரவணகுமார், உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். பலி யான மணிகண்டன் உடல், திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 'என்கவுன்டர்' நடந்த இடத்தை, மேற்கு மண்டல ஐ.ஜி., செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்த்தனர். எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் இருவரான மூர்த்தி, 60, தங்கபாண்டி, 27, ஆகியோரை போலீசார் கைது செய்து, உடுமலை ஜே.எம்., - 1 மாஜிஸ்திரேட் நித்யகலா முன் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். எஸ்.எஸ்.ஐ., கொலை வழக்கில் தொடர்புடையவர் அடுத்த நாளே என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கதறிய குற்றவாளிகள்
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின், குற்றவாளிகள் இருவரையும் சிறைக்கு போலீசார் அழைத்து சென்ற போது மூர்த்தி, 'என் மகனை கொன்னுட் டீங்களே' என கதறி அழுதார். தங்கபாண்டி, 'எங்கள் உயிருக்கு ஆபத்து என்றால், 'எஸ்கார்டு' எடுத்துச் செல்லும் போலீசாரே பொறுப்பு. காலையில் அண்ணனை எங்களுக்கு காட்டுனாங்க; உடனே கொன்னுட்டாங்க; கண்ணை கட்டிக் கொண்டு போய் சுடுவதற்கு நாங்கள் தான் கிடைத்தோமா?' என கதறினார். போலீசார் அவர்களை வாகனத்தில் ஏற்றிச் சென்றனர். இத னால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.