உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குப்பை தொட்டி வைக்கவில்லை... மழைநீர் வெளியேற வழியில்லை

குப்பை தொட்டி வைக்கவில்லை... மழைநீர் வெளியேற வழியில்லை

சாலைப்பணி எப்போது?அவிநாசி, பை-பாஸ் சாலை, சாய்பாபா காலனியில் ரோடு போட ஜல்லி கொட்டி ஒரு மாதமாகிறது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் நடந்து செல்ல முடியாமல் தடுமாறுகின்றனர். உடனே ரோடு போட வேண்டும்.- மணி, சாய்பாபா காலனி. (படம் உண்டு)காத்திருக்கும் ஆபத்துதிருப்பூர், 15 வேலம்பாளையம், மகாலட்சுமி நகர் விரிவு பகுதியில், சுகாதார நிலையம் எதிரில், தரைப்பாலத்தின் கம்பிகள் ஆபத்தான நிலையில் நீட்டியபடி உள்ளது.- முபாரக் பாட்ஷா, மகாலட்சுமி நகர் விரிவு. (படம் உண்டு) மழைநீர் தேக்கம்திருப்பூர், காந்தி நகர், அன்னபூர்ணா நகர், ஜே.எஸ்., கார்டன் செல்லும் வழியில் மழை பெய்து போதெல்லாம், மழைநீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கோகுலகிருஷ்ணன், அன்னபூர்ணா நகர். (படம் உண்டு)திருப்பூர், பள்ளக்காட்டுப்புதுார் பிரிவு, சோளியம்மன் கோவில், அமர்ஜோதி கார்டன் விரிவு பகுதியில் மழைநீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் வெளியேற வழியில்லை.- குட்டி, பள்ளக்காட்டுப்புதுார். (படம் உண்டு)திருப்பூர் மாநகராட்சி, 19வது வார்டு, எஸ்.எஸ்., நகர் மாநகராட்சி துவக்கப்பள்ளி வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையத்துக்குள் மழை பெய்தால், மழைநீர் புகுந்து விடுகிறது. சேதம் ஏற்படுகிறது. மாநகராட்சி நிர்வாகம் கவனித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரஞ்சித், எஸ்.எஸ்., நகர். (படம் உண்டு)கழிவுநீரால் அவதிசெங்குந்தபுரம் இரண்டாவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வழிந்தோடி துர்நாற்றம் வீசுகிறது. கால்வாய் அடைப்புகளை சீர்செய்ய வேண்டும்.- கதிர், செங்குந்தபுரம். (படம் உண்டு)குப்பை தொட்டி வைங்கபல்லடம், கரைப்புதுார் ஊராட்சி, மீனம்பாறை பகுதியில் குப்பை தொட்டி வைக்க வேண்டும். குப்பைகள் ரோட்டில் தேங்குவதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.- செல்வராஜ், மீனம்பாறை. (படம் உண்டு)ரியாக் ஷன்புதிய மின் கம்பம்வீரபாண்டி ஆரம்ப சுகாதார நிலையம் எதிரே உள்ள மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதாக 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. மின்வாரியம் மூலம் புதிய மின்கம்பம் மாற்றப்பட்டுள்ளது.- செல்வராஜ், வீரபாண்டி. (படம் உண்டு)


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ