உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / போக்குவரத்து நெரிசல்

போக்குவரத்து நெரிசல்

உடுமலை; மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் முன் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. திருப்பூர் மாவட்ட எல்லையில், தேசிய நெடுஞ்சாலையில் மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்ட் அமைந்துள்ளது. பஸ் ஸ்டாண்டுக்குள், டவுன் பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் செல்வதில்லை. புறநகர் பஸ்கள் பஸ் ஸ்டாண்ட் முன், பயணியரை ஏற்றி இறக்கிச்செல்வதால், அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்லும் வகையில், போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ