போக்குவரத்து நெரிசல்
உடுமலை; மடத்துக்குளம் பஸ் ஸ்டாண்டுக்குள், டவுன்பஸ்கள் தவிர புறநகர் பஸ்கள் உள்ளே செல்வதில்லை. புறநகர் பஸ்கள் வெளியே தேசிய நெடுஞ்சாலையில் நின்று மக்களை ஏற்றி, இறக்கிச்செல்கின்றன. இதனால், அந்த ரோட்டில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, அனைத்து பஸ்களும் பஸ் ஸ்டாண்டுக்குள் செல்ல போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.