திருநங்கை முன்மாதிரி விருது
திருநங்கையர் தினமான வரும் ஏப்ரல் 15ம் தேதி, திருநங்கையருக்கான முன்மாதிரி விருது வழங்கப்பட உள்ளது. அரசு உதவி பெறாமல், வாழ்வில் சுயமாக முன்னேறிய, குறைந்தபட்சம் 5 திருநங்கைகளின் முன்னேற்றத்துக்கு உதவியோருக்கு விருது வழங்கப்படுகிறது. திருநங்கைகள் நலவாரியத்தில் உறுப்பினராக இருக்கக்கூடாது.வரும் பிப். 10ம் தேதிக்குள், awards.tn.gov.inஇணையதளத்தில் விண்ணப்பம் பதிவு செய்யவேண் டும். தேவையான சான்றுகளுடன், திருப்பூர் கலெக்டர் அலுவலக தரைதளத்தில் இயங்கும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கவேண்டும்.