அடிப்படை பிரச்னைகளுக்கு எப்போது தீர்வு?
தி ருப்பூர் மாவட்டத்தில் உள்ள, 13 ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 264 ஊராட்சிகளில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. திருப்பூர் ஒன்றியம், முதலிபாளையம் ஊராட்சியில், பாறைக்குழியில் குப்பை கொட்டிய பிரச்னை தொடர்பாக, மக்கள் போராட்டம் நடத்தியதால், கிராம சபா ஒத்திவைக்கப்பட்டது. பெரும்பாலான ஊராட்சிகளில் கிராம சபா கூட்டங்களில், அடிப்படை பிரச்னைகளுக்கு ஊராட்சி நிர்வாகம் தீர்வு காண்பதில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர்.