உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மத்திய அரசின் ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசின் ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருப்பூர்; துணிச்சலோடு செயல்பட்டு உயிர்களை காப்பாற்றியோர், மத்திய அரசின் ஜீவன் ரக் ஷா விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை: மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், தைரியமான மற்றும் மனிதாபிமான செயல்கள் செய்து, உயிர் காக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கு சர்வோத்தம் ஜீவன் ரக் ஷா பதக், உத்தம் ஜீவன் ரக் ஷா பதக் மற்றும் ஜீவன் ரக் ஷா பதக் ஆகிய மூன்று விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. நீரில் மூழ்கிய, விபத்துக்கள், தீ விபத்து, மின் கசிவு, நிலச்சரிவு, விலங்குகள் தாக்குதல், சுரங்கங்களில் மீட்பு நடவடிக்கை போன்றவற்றில் உயிரை காப்பாற்றியவர்களுக்கு, 2025ம் ஆண்டுக்கான ஜீவன் ரக் ஷா பதக்க விருது வழங்கப்படுகிறது.தகுதியான நபர்கள், கலெக்டர் அலுவலக வளாக தரைதளத்தில், அறை எண், 35 ல் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பங்கள் பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் ஜூலை 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் அறிக்கையில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ