கோவிலுக்கு செல்ல பாதை கேட்டு போராட்டம்
வந்தவாசி:திருவண்ணாமலை மாவட்டம் கண்டவராட்டி கிராமத்தில், சிவன் கோவில் உள்ளது. இதற்கு, அங்குள்ள தனியாருக்கு சொந்தமான வழியாக தான் செல்ல வேண்டும். 2 அடி வழி விட்டால், வாகனங்கள் சென்று வர முடியும் என, அப்பகுதி மக்கள் கேட்டும் உரிமையாளர் மறுத்துள்ளார். ஆத்திரமடைந்த மக்கள், பஞ்., உறுப்பினர் சரத்துடன் சேர்ந்து, கூத்தம்பட்டி கிராமத்திலுள்ள மொபைல்போன் டவரில் ஏறி போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி - திருவண்ணாமலை சாலையிலும் மறியலில் ஈடுபட்டனர். அதிகாரிகள் பேச்சு நடத்தி, நடவடிக்கை எடுப்பதாகக் கூறவே கலைந்தனர்.