ஏர்போர்ட்டில் ரூ.4 லட்சம் சிகரெட் பறிமுதல்
திருச்சி,:ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாடுகளின் ஷார்ஜா நகரில் இருந்து திருச்சிக்கு, நேற்று முன்தினம் இரவு வந்த விமானத்தில் வந்த ஒரு பயணியின் பையில், பண்டல் பண்டலாக வெளிநாட்டு சிகரெட்டுகள் இருப்பதை அறிந்த, விமான நிலைய அதிகாரிகள், அவற்றை பறிமுதல் செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட 4 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 26,000 சிகரெட்டுகளை, சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்த விமான நிலைய அதிகாரிகள், அவற்றை எடுத்து வந்த பயணியிடம் விசாரிக்கின்றனர்.