உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருச்சி / பொய் கூறிய ஆசிரியைகள் சஸ்பெண்ட்

பொய் கூறிய ஆசிரியைகள் சஸ்பெண்ட்

திருச்சி:திருச்சி மாவட்டம், இனாம் பெரியநாயகி சத்திரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக, உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்கத்தின் மாநில தலைவர் அன்பரசன் இருந்தார். அதே பள்ளியில் பட்டதாரி ஆசிரியைகளாக பணியாற்றும் அர்ச்சனா, சுதா ஆகிய இருவரும், பள்ளி விதிமுறைகளுக்கு மாறாக நடந்தனர். இதை தலைமை ஆசிரியர் அன்பரசன் கண்டித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த இரு பெண் ஆசிரியைகளும், தலைமை ஆசிரியர் தங்களிடம் தவறாக நடக்க முயற்சிக்கிறார் என, கல்வித்துறை உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.விசாரணை நடந்தது. அதில், தலைமை ஆசிரியர் மீது ஆசிரியையர் பொய் புகார் கொடுத்தது தெரிய வந்தது.இந்நிலையில், அன்பரசன் தன் பணியிட மாறுதலை ஏற்றுக் கொண்டு, புதிய பள்ளிக்கு செல்வதாக கூறிவிட்டார். ஆனால் பட்டதாரி ஆசிரியர்களான அர்ச்சனா, சுதா ஆகிய இருவரும், பணியிட மாற்றத்தை ஏற்காமல், மருத்துவ விடுப்பில் சென்றனர்.இதையடுத்து, பொய்யான புகார் அளித்தல், தவறான தகவல் தெரிவித்தல், அதிகாரிகளின் பேச்சுக்கு கட்டுப்படாமல் இருத்தல் போன்ற காரணங்களை காட்டி, இரு ஆசிரியைகளையும் சஸ்பெண்ட் செய்து, திருச்சி சி.இ.ஓ., கிருஷ்ணப்பிரியா நேற்று உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி