மேலும் செய்திகள்
கல்லால் தாக்கப்பட்டவர் சாவு கொலை வழக்காக மாற்றம்
18-Feb-2025
கண்டமங்கலம்; கண்டமங்கலம் அருகே தனியார் நிறுவன வேன் கவிழ்ந்ததில் பெண் தொழிலாளர்கள் 12 பேர் காயம் அடைந்தனர்.கடலுார் மாவட்டம் , நெல்லிக்குப்பம் அடுத்த வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த பெண்கள் புதுச்சேரி திருபுவனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் வழக்கம் போல் கடந்த 10ம் தேதி மாலை பணி முடிந்து வேனில் வீட்டிற்கு புறப்பட்டனர். வேனை கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் 25; ஓட்டிச் சென்றார். வேன் மாலை 5;00 மணிக்கு, கண்டமங்கலம் அடுத்த துலுக்கநத்தம் அருகே ஆபத்தான வளைவில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக வேன் சாலையோரம் வயல்வெளியில் கவிழ்ந்தது. இதில் வாழப்பட்டு பகுதியைச் சேர்ந்த பூவிழி, பானுபிரியா, சந்தியா, பேபி ஷாலினி, குணவதி, ரேணுகா, அபிநயா, வைத்தீஸ்வரி, பிரேமா, ரேகா, சிவரஞ்சனி, பரிமளா ஆகிய 12 பேர் காயம் அடைந்தனர். உடன் அவர்களை மீட்டு கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின் பேரில் கண்டமங்கலம் சப் இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
18-Feb-2025