இந்து முன்னணியினர் 16 பேர் மீது வழக்கு
விழுப்புரம்: விழுப்புரத்தில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் 16 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.வேடசந்துார்கோவில் வழிபாட்டிற்குச் சென்ற இந்து முன்னணி நிர்வாகிகளை கைது செய்ததை கண்டித்து, நேற்று முன்தினம் மாலை, விழுப்புரம், நகராட்சி திடலில் மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இது குறித்த புகாரின் பேரில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, சதீஷ் உட்பட 16 பேர் மீது, விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்தனர்.