மத்திய மாவட்ட தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
விழுப்புரம் : விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க., சார்பில் கோலியனுார் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட வேலியம்பாக்கம், கண்டமானடி, பில்லுார், அரசமங்கலம் பகுதிகளில் 3,600 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர் முருகவேல், சேர்மன் சச்சிதானந்தம், பொதுக்குழு உறுப்பினர் சம்பத், மாவட்ட பொறியாளர் அணி செல்வகுமார், விவசாய அணி துணை அமைப்பாளர் கேசவன்.முன்னாள் ஒன்றிய சேர்மன் குப்புசாமி, மாவட்ட கவுன்சிலர் தமிழ்ச்செல்வி கேசவன், நகர துணைச் செயலாளர் சோமு, துணை அமைப்பாளர் செல்வி, ஊராட்சி தலைவர்கள் மகேஸ்வரி சோமு, சுதாபாபுஜி, விஜயசாரதி.ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் மணி, துணைச் செயலாளர் பாலாஜி, கிளைச் செயலாளர் ராஜமாணிக்கம், நிர்வாகிகள் பத்மநாபன், சுப்ரமணி, மணி, ராஜ்குமார், சுகுமார், குமாரசாமி, வெங்கடேசன், குமரவேல், பிரபாகரன், அய்யனார், பரமகுரு, செல்வம், கோபிநாத், நவீன், அரிதாஸ், லட்சுமி நாராயணன், கனகராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.