உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விநாயகர் சதுர்த்தி விழா; காப்பு கட்டுதலுடன் துவங்கியது

விநாயகர் சதுர்த்தி விழா; காப்பு கட்டுதலுடன் துவங்கியது

விழுப்புரம் : விழுப்புரத்தில் இந்து முன்னணி சார்பில், விநாயகர் சதுர்த்தி விழாவை காப்பு கட்டி தொடங்கினர்.விழுப்புரம் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி விழா 7ம் தேதி துவங்குகிறது. ஏராளமான இடங்களில் பிரம்மாண்ட சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபட உள்ளனர். விழாவையொட்டி, இந்து முன்னணியினர் நேற்று காப்பு கட்டிக்கொண்டு தொடங்கினர்.விழுப்புரம் பூந்தோட்டம் சித்திவிநாயகர் கோவிலில் காலை 9:00 மணிக்கு, இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் சிவா தலைமையில், இந்து முன்னணியினர் காப்பு கட்டிக்கொண்டு, விநாயகருக்கு பூஜை செய்து வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி