அரசு அலுவலர்கள் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம்
விழுப்புரம் : தமிழ்நாடு அரசு அலுவலர்கள் ஒன்றிய மாவட்ட செயற்குழு கூட்டம், விழுப்புரத்தில் நடந்தது.கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சடகோபன் தலைமை தாங்கினார். செயற்குழு உறுப்பினர் பூவழகன் வரவேற்றார். மாவட்ட மற்றும் வட்ட கிளைகளுக்கு வரும் மே மாதத்திற்குள் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டது. தேர்தல் நடத்தும் அலுவலர்களாக, பொன்னுசாமி, சக்திவேல், முகமது காஜா, வேல்முருகன், வெங்கடேச பெருமாள், ராமமூர்த்தி தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட நிர்வாகிகள் விருதகிரி, சங்கர், முருகன், மணிவண்ணன் மற்றும் சக்திவேல், மனோகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.