மேலும் செய்திகள்
கல்லுாரியில் கருத்தரங்கு
17-Feb-2025
விழுப்புரம் : விழுப்புரம் தெய்வானை அம்மாள் மகளிர் கல்லுாரியில், வணிகவியல் துறை கருத்தரங்கு நடந்தது.கல்லுாரியின் வணிக நிர்வாகத்துறை தலைவர் வாசுகி வரவேற்றார். சென்னை சோழிங்கநல்லுார் எல்காட் கிளையின் எச்.சி.எல்., செயல்முறை பங்காளரான சினேகா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.தொடர்ந்து, பெண் தொழில் முனைவோருக்கான தொழில் மேம்பாடு, தொழில் வளர்ச்சிக்கான செயல்திட்டங்கள் குறித்து விளக்கினார்.வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் தேவி நன்றி கூறினார்.
17-Feb-2025