உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பூட்டிய வீட்டில் 15 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி திருட்டு

பூட்டிய வீட்டில் 15 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி திருட்டு

விழுப்புரம்: வீட்டின் பூட்டை உடைத்து 15 சவரன் நகை, வெள்ளி பொருட்களை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம், சாலாமேடு, என்.ஜி.ஓ., காலனியை சேர்ந்தவர் ஜான் பேயிக் மனைவி ஹசினாபீ, 40; இவர் கடந்த 17ம் தேதி தனது வீட்டை பூட்டி கொண்டு, திண்டிவனத்தில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றார். பின், மீண்டும் அவர், நேற்று முன்தினம் இரவு 7:15 மணிக்கு வீட்டிற்கு வந்து திறந்து பார்த்த போது, பின் பக்க கதவின் தாழ்ப்பாள் உடைந்திருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது, பீரோவில் இருந்து 15 சவரன் நகை, 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. தகவலறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர். பின், அங்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, மர்ம நபர்கள் விட்டு சென்ற தடயங்கள் சேகரிக்கப்பட்டன. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ