உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தங்க மயில் ஜூவல்லரியில் 3 நாட்களுக்கு சேதாரத்தில் சலுகை

தங்க மயில் ஜூவல்லரியில் 3 நாட்களுக்கு சேதாரத்தில் சலுகை

விழுப்புரம்: தங்க மயில் ஜூவல்லரியில், இன்று முதல் 3 நாட்கள் தங்க திருவிழாவில் மாலை மற்றும் நெக்லஸ், வளையலுக்கு சேதாரத்தில் அதிரடி சலுகை வழங்கப்படுகிறது. மதுரையை தலைமையிடமாகக் கொண்ட தங்க மயில் ஜூவல்லரி நிறுவனம் தமிழகம் முழுதும், 66 கிளைகளைக் கொண்டு செயல்பட்டு வருகிறது. 35 லட்சத்திற்கும் அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இந்நிறுவனத்தில் 3,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். தங்க மயில் ஜூவல்லரியின் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகையாக இன்று 26ம் தேதி முதல் வரும் 28ம் தேதி வரை 3 நாட்கள் மட்டும் அனைத்து மாலை, நெக்லஸ் மற்றும் வளையல்களுக்கு மிக குறைந்த சேதாரத்தில் நகைகள் விற்பனை செய்யப்படுகிறது. சேதாரத்தில் அதிரடி தள்ளுபடியாக 16 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 7.99 சதவீதமும், 20 சதவீதம் வரை உள்ள நகைகளுக்கு சேதாரம் 10.99 சதவீதமும், 20 சதவீதத்திற்கு மேல் உள்ள நகைகளுக்கு சேதாரம் 13.99 சதவீதம் வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு தங்க மயில் நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ