உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 4ம் கட்ட கலந்தாய்வு

அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை 4ம் கட்ட கலந்தாய்வு

விழுப்புரம்: அன்னியூர் அரசு கல்லுாரியில் நாளை (19ம் தேதி) 4ம் கட்ட கலந்தாய்வு நடக்கிறது.கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) அசோகன் செய்திக்குறிப்பு:அன்னியூரில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், நாளை (19ம் தேதி) காலை 10:00 மணியளவில், அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் 4ம் கட்ட சிறப்பு கலந்தாய்வு மற்றும் மாணவர் சேர்க்கை நடக்கிறது. இதில் தரவரிசை மதிப்பெண் 220 முதல் 200 வரை பி.சி., - பி.சி.எம்.,- எஸ்.சி.ஏ., - எஸ்.டி., ஆகிய பிரிவைச் சேர்ந்த மாணவ, மாணவியர் உரிய அசல் மற்றும் நகல் சான்றிதழ்களோடு பங்கேற்கலாம்.மேலும், மே 27ம் தேதிக்கு பின் விண்ணப்பித்த மாணவர்கள் அனைத்துப் பிரிவினரும் மதிப்பெண் தரவரிசை 400 முதல் 220 வரை அதே தேதியான 19ம் தேதி காலை 10:00 மணியளவில் நடக்கும் கலந்தாய்வில் உரிய சான்றிதழ்களுடன் பங்கேற்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி