மேலும் செய்திகள்
சித்திரை வருடம் அழைப்ப
15-Apr-2025
திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் கோட்டையிலுள்ள அம்மச்சாரம்மன் மற்றும் முத்துமாரியம்மன் கோவிலின் திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நேற்று காலை நடந்தது.இதையொட்டி நேற்று காலை 6:௦௦ மணி அளவில் திருச்சுற்று தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு விழா நடந்தது.காலை 8:50 மணி அளவில் திருக்குடங்கள் புறப்பட்டு அம்மச்சார் அம்மன் கருவறை விமானத்தை வந்தடைந்தது. தொடர்ந்து பூஜிக்கப்பட்ட கலசநீரால் கருவறை விமானங்களுக்கு திருக்குட நன்னீராட்டு நடந்தது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
15-Apr-2025