உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / தம்பதியை தாக்கிய முதியவர் மீது வழக்கு

தம்பதியை தாக்கிய முதியவர் மீது வழக்கு

விழுப்புரம் : கடனை திருப்பிக்கொடுக்காத தம்பதியை தாக்கிய முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர். விழுப்புரம் அடுத்த மரகதபுரத்தை சேர்ந்தவர் சுதர்சனம், 40; இவர், அதே பகுதியை சேர்ந்த சுப்ரமணி, 70; மகன் முத்துக்குமார், 35; என்பவரிடம் 6 மாதங்களுக்கு முன், 10 ஆயிரம் ரூபாய் கடனாக வாங்கினார். இதுவரை பணத்தை திருப்பிக்கொடுக்காததால், சுதர்சனம் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, 38; ஆகியோரை சுப்ரமணி திட்டி தாக்கினார். விழுப்புரம் தாலுகா போலீசார், சுப்ரமணி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி