விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில் தினமலர் - பட்டம் வினாடி-வினா
விழுப்புரம்: விழுப்புரம் வி.ஆர்.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'தினமலர்'பட்டம் இதழ் வினாடி- வினா போட்டி நடந்தது. புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சார்யா கல்விக் குழுமம் இணைந்து நடத்தும் பதில் சொல் ; பரிசு வெல்' வினாடி-வினா போட்டி, விழுப்புரம் வி.ஆர்.பி., பள்ளியில் நேற்று நடந்தது. முன்னதாக நடந்த தகுதி சுற்று முதல் நிலைத் தேர்வில், 16 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் 8 குழுவாக பிரிக்கப்பட்டு, இரண்டு சுற்றுகள் போட்டி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தலைமை ஆசிரியர் கந்தசாமி தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர்பிரித்திவிராஜ் முன்னிலை வகித்தார். போட்டியில் மாணவிகள் ரக் ஷிதா, தெரசா முதலிடத்தையும், மாணவர்கள் ரித்தீஷ், ருத்ரமூர்த்தி இரண்டாம் இடத்தையும் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் தாளாளர் சோழன் பாராட்டு சான்றிதழ், கேடயம் மற்றும் பதக்கம் வழங்கினார். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கி, கவுரவிக்கப்பட்டது.