தி.மு.க., உறுப்பினர் சேர்க்கும் பணி
அவலுார்பேட்டை : கோவில்புரையூரில் தி.மு.க., சார்பில், 'ஓரணியில் தமிழ்நாடு'புதிய உறுப்பினர் சேர்க்கும் பணி நடந்தது.ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமை தாங்கினார். மஸ்தான் எம்.எல்.ஏ., வீடு, வீடாக நேரில் சென்று புதிய உறுப்பினர் சேர்க்கும் பணியை துவக்கி வைத்தார். ஒன்றிய துணைச் சேர்மன் விஜயலட்சுமி, ஊராட்சி தலைவர் ரமேஷ் , நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.